மதத்தை சாதியை
சம்பிரதாயத்தை
உடைத்தெறிய
இளைஞர்களுக்கு
கிடைத்த ஆயுதம்
"காதல்"
எதையும் எதிர் பார்த்தால் ஏமாற்றம் நிச்சயம் அன்பும் சரி உதவியும் சரி எதிர்பார்ப்புகள் அற்றது தான் உண்மையாக இருக்கும் இறுதி வரை...
மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்“
இதமான மழையிலும் நனைய மறுத்த குடையை விரித்தோம் இயற்கை பற்றி பேச நமக்கென்ன யோக்கிதை
தாண்டிப் போகும் முன்னே என்னை சீண்டிப் போகிறது சோகம். விடுவேனா நானும் கோபம் கொண்டே விரட்ட முயல்கின்றேன். சிரித்துவிட்டு போகிறது சோகம்
சுமை சுமந்தபடி என்னை கடந்து சென்றார் முதியவர் ஒருவர். அவர் கடந்தபின் அவரது சுமையையும் சேர்த்தே சுமந்தது என் மனம்
ஆயிரம் பேர் எழுதிய கவிதைகளை விட எனக்கு பிடித்த கவிதை என் அம்மா ...!!